திருச்செங்கோடு செங்குந்தர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெடிக்கல் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய துறைகளின் சார்பில் , தேசிய தொழில் நுட்பக் கருத்தரங்கு நடந்தது .
சென்னை ரீச் ஐ. டி ., கம்யூனிகேஷன் நிறுவன நிர்வாக இயக்குனர் முகமது ஆசாத் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது : இந்தியா , இளைஞர்களை நம்பியுள்ளது . இ . இ . இ ., படிக்க போட்டி அதிகமாக உள்ளது . வேலை பெறுவதற்காக மட்டும் படிப்பு என்று இல்லாமல் , புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் . தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக , 80 வகையான எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் பொருத்திய கார்கள் வந்து விட்டன . எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் , உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் , நாம் சில நொடிகளில் தெரிந்து கொள்ள முடிகிறது .
பல நன்மைகள் இருந்த போதும், பயன்படுத்துபவர்களை பொறுத்து சில தீமைகளும் நேர்கிறது . நம்மை கெடுக்கும் தீயசக்திகளாக டிவியும் , மொபைல் போனும் உள்ளன . அறிவியல் , வளர்ச்சியின் அடையாளங்களாக இருந்தாலும் , நாம் இந்த கருவிகளின் அடிமைகளாக இருப்பது , நமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது . மொபைல் போன்கள் , மாணவர்களின் காலத்தை வீணாக்குகிறது . தொடந்து , மொபைல் போனை பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .
அறிவியலை, மனித வாழ்க்கைக்கு பயன்படும் விதமாக பயன்படுத்த தெரிந்துகொள்ள வேண்டும் . ஸ்பாட் ஆன் டிவைஸ் என்ற கருவியை மேல் நாடுகளில் நடக்கும் கருத்தரங்குகளில் பயன்படுத்துகின்றனர் . அதன் மூலம் நாம் நேரில் சந்திக்க முடியாதவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது . சோதனையை சாதனையாக்கி காட்ட மாணவர்கள் பழக வேண்டும் . படிக்க வேண்டும் ; சிந்திக்க வேண்டும . சமுதாய பயன்பாட்டிற்கு பயனுள்ளதாக உங்கள் படிப்பு திகழ வேண்டும் . திறமை நம்மிடம் இருந்தால் தான் , நாம் நல்ல கம்பெனியை தேர்ந்தெடுக்க முடியும் " இவ்வாறு அவர் பேசினார் .
No comments:
Post a Comment