Powered By Blogger

Friday, January 20, 2012


மதிப்புக்குரிய எனது நண்பர்களே.............
கடந்த 3வருடங்களாக எனது தனிப்பட்ட பரிசோதனைகள்
இயக்கமுறைகள்,
இயந்திர பொறியியல் கல்விகளைக் பிரதியிட்டு கந்தசக்தியைப்பயன்படுத்தி
கடலலைமூலம் எமது வடக்கு மாகாணத்துக்கு மின்சாரசக்தி பெறும் 
திட்டம் ஒன்றை பலதுன்பங்கள் மத்தியில் 7.12.2011 அன்று நிறைவு செய்தேன்,அந்த திட்டத்தினை எனது நண்பர் க.மகேந்திரன்(இலங்கை அரசாங்கத்தில் 
அனுமதி பெற்ற இயந்திரவியல் பொறியியலாளர் )எனது திட்டத்தை
பரிசீலித்து ஊக்குவித்தார். இந்த திட்டம் பற்றிய அனைத்து படிவங்களையும் உலக காப்புரிமை சட்டத்துக்கு அமைவாக இலங்கை காப்புரிமை 
அதிகாரசபைக்கு அனைத்து படிவங்களையும் ஒன்லையின் ஊடாக
(13.12.2011)அனுப்பிவைத்தேன், (எனது இலங்கை காப்புரிமை பதிவு
இலக்கம்83326REG ) ஆனால் இலங்கை காப்புரிமை அதிகாரசபை
அனுப்பிய பதில்
இந்த திட்டம் சரியானது ஆனால் இதை உருவாக்க என்க்கு இயந்திரவியல் பொறியியலாளர் டிப்ளோமா,இல்லை ,கடல் நீருக்கும், கடல்வாழ் 
உயிரினங்கள்,சூழல் என்பவைமாசடையும் என்ற காரணங்கள்காட்டி
எனது திட்டத்தை நிராகரித்து விட்டனர்.
அதனோடு நான் நின்று விடவில்லை.......... இங்கிலாந்தில் உள்ள உலக காப்புரிமை அதிகாரசபைக்கு . இந்த திட்டம் பற்றிய அனைத்து படிவங்களையும் ஒன்லையின் ஊடாக(19.12.2011)அனுப்பிவைத்தேன் . உலக காப்புரிமை அதிகாரசபை பதிவு இலக்கம் LC- 821899அங்கு எனது திட்டம் அங்கிகரிக்கப்பட்டது.இவை பற்றிய ஆவணங்கள் எனது முகப்புத்தகதில் உள்ள அல்பத்தில் உள்ளது.()

எனது திட்டம் பற்றி நான் முகப்புத்தகம், எனது புளக்,யூரியூப் 
என்பவற்றில் முன்பே காப்புரிமை செய்து பதிவு செய்தேன்,இது அனைவரும் அறிந்ததே.....
எனக்கு அன்று தொடக்கம் பல பல கேளிக்கையான ,வேகுளித்தனமானபாராட்டி, பலநாடுகளில் இருந்தும மின்னஞ்ஞல்கள் வந்து குவிந்தன, 

இன்று இலங்கையில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகள், 
இணையங்கள், நண்பனின் ஊடாக ஒரு செய்திஅறிந்தேன் அறிந்தவுடன் அவை பற்றிய செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்டேன்,என்னை அறியாமலே எனது கண்களில்கண்ணீர் வடிகிறது.

எனது திட்டத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம் இன்று அதே 
திட்டதை தேசிய மின்வலு திட்டமிடல் பொறியியலாளர்களின் திட்டம்
எனக்கூறி, இந்த திட்டத்தை இன்னும் 6மாதங்களுக்குள் திட்டத்துக்கானவேலைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்,நான் ஒரு தழிழன் என்ற 
காரணத்துக்காகவும்,எமது தனித்திறன்களை மழுங்கடிக்கும் நோக்கத்துக்காகவே இலங்கை அரசாங்கம் இப்படியான ஈனச் செயல்கள் செய்து வருகிறது. அன்பான நண்பர்களே எனது உழைப்பு,இலட்சியம்,3வருட கனவு நித்திரையின்மைஎல்லாவற்றையும் சிதைத்து என்னை கண்கலங்க வைத்த அரசாங்கத்துக்கும் எனது திட்டத்தை பெயர்மாற்றி செய்யும் இந்த திட்டத்துக்கும் உடந்தையாக இருக்காதிர்கள்.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது என் கேளி செய்த நண்பர்களே எனது திட்டத்தை இன்று சூறையாடி இலங்கை அரசங்கம் செய்யயிருக்கின்றது என்பதில் இருந்து புரிகிறதா எனது திட்டம் எவ்வளவு பெரியது 
என்று. தயவுசெய்து சாதிக்க முன்வருபர் எவரையும் கேலி செய்தீர்கள்.

என்னால் தனியாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கமுடியாது ஏன்எனில் 2வருடம் என்னை சிறையில் சிதைத்து சித்திரவதைப்படுத்தியது எனக்குத்தான் தெரியும்.

தயவுசெய்து இந்த அரசாங்கத்துக்கும் எனது திட்டத்தை பெயர்மாற்றி 
செய்யும் இந்த திட்டத்துக்கும் உடந்தையாக இருக்காதிர்கள்.

இதற்கு நான் சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு 
தெளிவு படுத்துங்கள்.
எனது திட்டத்துக்காக நான் பட்ட துன்பங்கள் வீண்போகக்கூடாது
எனது இலட்சியம் அழிந்து விடக்கூடாது 

**************இப்படிக்கு மாறத்துயருடன் க.தயாளன்********* 
20/01/2012
11.05PMhttp://www.google.com.qa/search?q=sri+lanka+development+magnetic+power+sea+wave+project+2012&hl=en&safe=active&prmd=imvns&source=lnms&ei=V5sZT5O9O8nKrAf5z8ToDQ&sa=X&oi=mode_link&ct=mode&cd=1&ved=0CDAQ_AUoAA&biw=1366&bih=624

No comments:

Post a Comment